Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமாவளவன் பிளக்ஸ் பேனரை கிளித்ததை கண்டித்து பிளக்ஸ் பேனரை இறக்கி வைத்தனர்

ஜுலை 29, 2019 04:46

கும்பகோணம்: கும்பகோணத்தில் திருப்புறம்பயத்தில்  விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞர் சங்கர்  படத் திறப்பு விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உருவத்தை அச்சிட்டு திருப்புறம்பயம் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.  

அந்த பேனர் நேற்று கிழித்து இருந்தது இதனை  திருப்புறம்பயம்  தெற்கு வீதியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் கருப்பன் என்கின்ற பாஸ்கர் வயது 35 மற்றும் அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் சக்தி என்கின்ற சக்திவேல் வயது 35 ஆகிய ஆகிய இருவர்தான் பிளக்ஸ் பேனரை கிழித்ததாக நினைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இருவரது வீட்டையும் அடித்து நொறுக்கி அவர்களை தாக்கி காயப்படுத்தினார்கள். 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் .பின்னர் திருமாவளவன் பிளக்ஸ் பேனரை கிறித்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்புறம்பயம் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பிளக்ஸ் பேனரை கீழே இறக்கி வைத்தனர்.

இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் வலியுறுத்தினர்.  இதனால் அப்பகுதியில்  அந்த பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டனர்மேலும் இதுகுறித்து சுவாமிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்